வெள்ளி, 6 டிசம்பர், 2019


காவடிச் சிந்து


அன்புடன் வாழ்வதால் வெற்றியே- உன்
ஆற்றலும் நீண்டிடும் பற்றியே- அங்கு
ஆவலாய் உன்னைத்தான் சுற்றியே-வரும்
அசைவாலுனை இசைபாடிடும்
நிறைவாலினி உளமோதிடும்
ஐயமே இன்றிநீ பெற்றியே-பெறும்
ஆளுமை உன்னிடம் தொற்றியே!


துன்பமும் போக்கிடும் அன்புதான்- அதைச்
சொல்லாத மேனியும் என்புதான் - உன்
சுற்றமும் நட்புமே தெம்புதான்- வரும்
சுகமானதைப் பெறுவாயெனக்
கவியாலிதைத தருவாயெனச்
சொல்லுதல் என்னுளப் பண்புதான் - இதைத்
தூர்த்தம னத்தினில் வம்புதான்!


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக