புதன், 4 டிசம்பர், 2019

*கவலைகள்*

மனத்தில் சிறையாய் வலைதான் கவலை
வனத்தில் அறியா வழிபோல் மனமும்
தனித்த இடத்தினி்ல் தாங்கா நிலையில்
இனிக்கும் செயல்கள் இழந்து.

இறந்த பொழுதுகள் எங்குமே மீளா
மறந்து விடுங்கள் மருந்தெனக் காலம்
கடந்து மனத்தின் கவலை களைக
நடக்கும் இனிவரும் நாள்.

நாட்டில் தினமும் நடக்கும் கொடுமைகள்
வீட்டில் வளரும் விடையறியாத் துன்பங்கள்
மூளையின் ஓரிட மூலைக் கவலைகொள்
வேளைதான் நம்கவலை வித்து.

சிக்கலெனும் பூட்டைச் சிறப்பாய்த் திறக்கவே
அக்கணத்தில் உள்ளம் அறிய விடைதரும்
சிந்தனை நற்கவலைச் சேர்ந்த திறவுகோல்
நிந்தனை யில்லை நினை.

கவியன்பன் கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக