திங்கள், 9 டிசம்பர், 2019











ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் 
ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் 
ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் 
ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள் 

ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள் 
ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள் 
ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும் 
ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும் 

ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும் 
ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும் 
ஈரச்சு ருதியினின் னிசைதானி லையுமாச்சு 
ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு 

ஈரமென்னு மீரெழுத்தே இக்கவியின்தலைப்பெழுத்து 
ஈரமென்னு மீரெழுத்தா லிப்புவியின் தலைநிமிர்த்து 
ஈரத்தைக் காட்டவில்லை ஈழத்தை மீட்கவில்லை 
வீரத்த மிழனின்னும் விழிக்கவில்லை விழித்தாரோ







”கவியன்பன்” கலாம், 

































0 கருத்துகள் :

கருத்துரையிடுக