வெள்ளி, 20 டிசம்பர், 2019





கிழிக்க இயலாத
உணர்வுக் காகித்தில்
அழிக்க இயலாத உண்"மை"களால்
 எழுத்தோவியம் தீட்டிய
ஓவியமே!
என்னை வரைந்தவைகள்
இன்னும் இருக்கின்றன
இதயப் பெட்டகத்தில்!

சடுதியில் வருமா 
கடுதாசி என்று
அடம்பிடித்த உன் மனத்தைப்
படம்பிடித்த வரிகள்
தீராத வலிகள்!

ஒற்றைத் தீபமாக
ஏற்றிய காதற் பொறி
எத்துணை வெளிச்சத்தைப்
படர விட்டது
மனக்குகைக்குள்!

"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக