புதன், 18 டிசம்பர், 2019

மனச்சான் றொன்றே மனம்நிறை இறைவனாம்
உனையெப் பொழுதும் உற்று நோக்குவான்
தண்டிப் பதிலவன் தலைமை நீதி யரசன்
கண்டிப் பதிலவன் கண்ணெதிர் கடவுள்
நீங்காப் பாவம் நீசெய் தாலும்
தூங்கா மலுன்னைத் துரத்தி யடிப்பான்
பொய்ச்சான் றொன்றப் புளுகி னாலும்
மெய்யில் பயத்தை மெய்யாய்த் தருவான்
கண்வழி யுன்னைப் காட்டிக் கொடுப்பான்
மண்ணில் நீயும் மரணித் தாலும்்
இம்மையில் மறுக்கும் எத்தனை பாவங்கள்
செம்மையாய்க் தண்டனை தெரிய வைத்து
உண்மையைப் போட்டுநீ உணரும் வண்ணம்
திண்மையாய் உன்னைத் திணற டிப்பான்
வெறுமையாய் நீநினைத் தாலும்
மறுமையில் எதிரி மனச்சான் றொன்றே!

"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக