ஞாயிறு, 22 டிசம்பர், 2019


வரம் என்னும் கனிதரும் 
மரம் தான் தவம் 

சுவனமென்னும் வரம் 
சுபச்சோபனம் தரும் 
கவனமுடன் நோனபாய்க் 
கடைபிடிக்கும் தவம்! 

தா வரம் என்று கேளாமலே 
தாவரம் நமக்கொரு வரம்! 
யாவரும் கேளிர் 
யாதும் ஊரென வாழ்வது 
யாக்கைப் பெற்ற வரம்! 

மாதவராய்ப் பிறப்பதுவே 
மாதவம் பெற்ற வரம் 
சாதனைப் பெண்களே 
தாங்கி நிற்கும் நாட்டின் உரம்! 


ஆக்கம் 

"கவியன்பன்"கலாம் 







0 கருத்துகள் :

கருத்துரையிடுக