செவ்வாய், 3 டிசம்பர், 2019


வலியோ ரெளியோர் மீதினிலே
          வகுத்து வைத்தக் கோடாகும்
பலியாய்ப் போகு மெளியோரும்
         பயமாய்ப் பார்க்கும் கேடாகும்
வேலி தாண்டி வரவியலா
         விரக்தித் தருமே இக்கோடும்
நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
       நீசர் செய்த பெருங்கேடாம்
கானல் நீராய் வாழ்நாளும்
        கனவாய்ப் போய்தா னழிந்தது
வானம் பார்க்கும் பூமிதானே
       வறுமைக் கோடு வழங்கியது
இருளில் வாழ மின்வெட்டில்
          எல்லார் வீடும் சமமாக!
பொருளா தாரக் கோட்டிற்றான்
         பெரிய விரிசல் பாகுபாட்டில்

“கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக