செவ்வாய், 3 டிசம்பர், 2019


கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட
கருவுடன் எண்ணமாய் வார்க்கும்
அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும்
அனைத்திலும் கற்பனைப் பூக்கும்
நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்
நம்பியே துணிவுடன் செல்லும்
பற்பலக் கடமை யாவுமே எண்ணப்
பயனென உறுதியாய்ச் சொல்லும்


கனவெனும் கணவன் மனமெனும் மனைவிக்
கலந்திடும் போழ்தினில் “எண்ணம்”
நனவெனும் வாழ்வுத் தொட்டிலில் உதிக்கும்
நல்லதாம் சிசுவினின் வண்ணம்
தினமுமே யுண்ணு முணவிலும் நேர்த்தித்
தெரிவுட னுடுத்திடு முடையும்
மனதினில் தோன்றும் கற்பனைக் கூற்றின்
மறுபுறக் காட்சியின் விடையாம்


--

”கவியன்பன்” கலாம



             


0 கருத்துகள் :

கருத்துரையிடுக