சனி, 7 டிசம்பர், 2019



-




நிகழும் செயலுக்கு நித்தம் இறையைப்
புகழும் வணக்கம் புரிந்தால் - அகமும்
முகமும் அமைதி முழுமை பெறுமே
சுகமும் கிடைக்கும் சுழன்று.

உப்பிட நாடும் உணவினைப் போலவே
இப்புவி வாழும் எவரும் புகழை
விரும்பிடச் செய்தல் விலக்கிட வேண்டா
அரும்பிடும் ஆசை அளவு

புகழ்ச்சி தரும்நற்  புலமையும் வேண்டும்
இகழ்ச்சியைக் கண்டால் இடிந்து விடாதே
நிகழ்ச்சிகள் வென்று நிரம்ப மனத்தில்
மகிழ்ச்சியைக் கொள்வாய் மலர்ந்து.


தோன்றிற் புகழொடு தோன்றக் குறளிலும்
சான்றுக் கிடைத்ததைச் சற்றும் குறைவின்றி
ஊன்றிச் செயல்படு; உன்னைப் புகழ்ந்திடத்
தோன்றும் எவர்க்கும் தொடர்ந்து.

-


”கவியன்பன்” கலாம்





0 கருத்துகள் :

கருத்துரையிடுக