திங்கள், 9 டிசம்பர், 2019





படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
 பூஞ்சோலை

கருப்பையின் கதகதப்பு
அன்னையின் அரவணைப்பு
அத்தனையும் வாடாத பூ

மனைவியின் இதழ்
மலரும் சிரிப்பு
மாதுளையின் பூ

மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ

காதலியின்
கன்னச் சிவப்பு
கவரும் ரோசாப் பூ

நண்பனின் நட்பு
நாளும் பாதுகாப்பு
அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சிப் பூ

அத்தனைக்கும்
ஆணிவேர் அன்பு

அரசியலார் அள்ளி வீசும்
வாக்குறுதி காகிதப்பூ


என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்.


‘”கவியன்பன் கலாம்





0 கருத்துகள் :

கருத்துரையிடுக