ஞாயிறு, 7 ஜூன், 2020

அடல்வரும் நிலத்தில் என்கின் ......... அடுத்துடன் திரும்பத் தோதாய் கடந்திடத் தடைகள் இன்றிக் ......... கடந்திடும் பறவை நீதான்! இடர்வரின் இருக்கும் சுற்றம் ......... இணைந்திடும் அதனால் நித்தம் மடல்வரும் கதவை நோக்கி ......... மருகிடும் துயரும் இல்லை! சுடர்விடும் ஆன்மா மற்றும் ......... சுருக்குகள் இல்லா நெஞ்சம் படர்ந்திடப் பாரில் உம்போல் ......... பணித்திறம் பாங்காய் மேவ தடங்களும் சீராய் ஆகும் ......... சமைந்திடும் அன்பின் வாழ்வு நடமிடும் நாதன் கண்டு ......... நமதவா சொல்வாய் நாராய்! கவியன்பன் கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக