வியாழன், 9 ஜனவரி, 2020










துள்ளி உலாவரும் சுந்தரக் கால்களில் 
வெள்ளிக் கொலுசுதரும் மெய்சிலிர்க்கு மோசையை 
அள்ளிப் பருகு மழகு மலர்களின் 
கள்ள மிலாநேசம் காண். 


கொலுசுதரும் சப்தங்கள் கூட்டிய பூக்கள் 
குலுக்கிவரும் பாதங்கள் கொஞ்சும்- இலக்கியம் 
சொல்லுகின்ற காதலைச் சோர்வின்றிக் காணலாம் 
வெல்லுமிந்தக் காட்சி விளம்பு 


"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக