சனி, 25 ஜனவரி, 2020


குடியரசுக் கொண்டாட்டம் வருடந் தோறும் 
*****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் 
விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் 
*****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் 
முடியாத நிலைமைக்கு வந்த தாலே 
*****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே 
படியாத அரசியலார் போடும் வேசம் 
***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம் 



புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம் 
***** பொய்யுலகி னாசையிலே மூழ்கிப் போனோம் 
மனிதமானம் என்னவென்று தெரியாக் காயம் 
*****மலையேறிப் போனதிங்கு மனித நேயம் 
இனிதானச் சொற்களுக்கிங் கிடமே யில்லை 
*****இந்தியாவில் கொலைவெறிக்குப் புகழின்எல்லை 
கனிவானக் கவிதையிலும் கலந்து போச்சு 
*****கலப்படம்தான் கலைப்படமாய் விளைந்துபோச்சு 




”கவியன்பன்” கலாம். 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக