வெள்ளி, 17 ஜனவரி, 2020




கள்ள மறியாத வெள்ளை மனமே
கண்விழி எங்கும் புகுந்த கனவே
உள்ளம் வணிகம் புரியாத முத்தமே
உன்னன்புப் புன்னகை மயக்கும் நித்தமே

மலரை விடவும் உனதுடல் மென்மை
புலரும் பொழுதை விடவும் உண்மை
பலரும் வியக்குகின்ற பேரன்புப் பெட்டகம்
விலக முடியாக் கவிதையின் புத்தகம்


"கவியன்பன்"கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக