சனி, 11 ஜனவரி, 2020

"ஃபிர்அவ்னை வீழ்த்தியவர்கள்" என்று
பிரச்சாரம் செய்தால் போதுமா?
மூஸா(அலை)லைப் பின்பற்றியோர்
முயன்றுப் பெற்ற நம்பிக்கை உண்டா?

"நம்ரூதை வென்றவர்கள்" என்று
நாவில் நீர் வற்ற கோஷமிட்டால் போதுமா?
நம்மிடம் இப்ராஹிம்(அலை) நன்னம்பிக்கை
நல்லமல்கள் அதிகமாக உண்டா?

அல்லாஹ் உடைய உதவி
அமல்களால் நிரம்பும் ஈமானுக்குத் தான்

*பேரணிகளுக்குக் கூடிய கூட்டம்
பேரருளாளனைத் தொழுவதற்கு
ஃபஜ்ர் தொழுகையில் கூடுக;
படைத்தவனின் உதவியை நாடுக!*

*313 எண்ணிக்கை தான்
முற்றிலும் நிராயுதபாணி தான்
நெற்றிகள் இரவெல்லாம் சுஜூதில்
வெற்றியைப் பெற்றனர் இறையின்
பற்றினைப் பெற்ற பத்ருயின்கள்*

உற்றுப் பாருங்கள் நம்மிடம்
வெற்று வீர கோஷங்கள் தான்
சற்றும் தளராத அமல்களால்
வெற்றி உறுதி வரலாற்றுச் சேதி

முஸல்லாக்கள் காலியாக
முப்பது பள்ளிகள்
விசாலமான கூடங்கள்
வெற்றிடமாய்ப் போனதால்
வெற்றிகளும் கைநழுவுகின்றன!

தராவீஹ் வந்த கூட்டம்
தவறாமல் ஃபஜ்ர் தொழாமல் நட்டம்
இராப்பகலாய் விழித்து
இறைவனுக்காக நோன்பிருந்த கூட்டம்
இன்று அதே பள்ளிகள் அழைப்பதை
ஏன் மறந்து ஓட்டம்?

ஃபிர்அவ்னையும், நம்ரூதையும், அபூஜஹிலையும்
பிற எதிரிகளையும் வென்றது
பிடிப்பான *ஈரானும் அமல்களும்* தான்!



"கவியன்பன்" கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக