திங்கள், 27 ஜனவரி, 2020


இக்கரைக்கு அக்கரைப் பச்சை; 
என்றும் அலைபாயுமே மனோயிச்சை 
சக்கரைக்கு எறும்பு எதிரிபோல 
சந்தோஷத்துக்கு எதிரி கவலை 
சுதந்திரத் தாய் நாட்டிலே 
சுகம் உண்டு; 
செல்வம் இல்லை 
இயந்திர வாழ்வுதான் இங்கே 
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே? 
எல்லார்க்கும் எல்லாமே கிடைத்து விட்டால 
இறைவனே இல்லை என்று 
சொல்லி விடுவான் மனிதன்; 
அதனால் 
சொற்ப வாழ்வே இப்படித்தான் 
இல்லாரும் உள்ளோரும் 
இணைந்து தானே 
நில்லா உலகை 
நிர்மாணிக்க வேண்டிய நியதி 
நேற்று என்பது நினைவு 
நாளை என்பது கனவு; 
இன்று மட்டுமே உண்மை; 
இதனை அடைந்தால் நன்மை 


“கவியன்பன்” கலாம் 






. 

0 கருத்துகள் :

கருத்துரையிடுக